Thursday, July 28, 2011

தவிக்குதடி என் மனது



உன் பாதமலரைத் தீண்ட 
தாவி குதித்து வந்த அலைகள் 
மயங்கி விழுந்து திரும்பியதோ 
உன் ஸ்பரிசத்தால்... 

உன் திருமுகத்தைக் கண்டபின் 
அந்த நிலவும் புலப்படவில்லையடி
என் விழிகளுக்கு ...

நிலவில் மேடு பள்ளங்கள் உண்டு 
என செயற்கைக்கோள் செலுத்தி கண்டு 
பிடித்த மூடர்கள் என்னிடம் கேட்டிருந்தால் 
சொல்லிருப்பேனடி உன் 
கன்னத்தையும் அதில் விழும் 
குழியையும் காட்டி.. 

உன் கன்னத்தில் முத்தமிடத் தான் 
உன் செவிமடலில் தொங்கி 
துடியாய் துடிக்கிறதோ 
உன் காதணியின் வளையம்... 

வகுப்பறையில் நீ துயில்கொள்ளும் 
அழகை ரசிக்கவே தவறாது 
வந்தேனடி நான் கல்லூரிக்கு... 

கூந்தலுக்கு இயற்கையில் மனம் 
உண்டோ எனத் தெரியாதடி எனக்கு 
ஆனால் என் மனதை 
கட்டி இழுக்கும் விசைமட்டும் 
உள்ளதடி அதற்கு... 

உன் சொல் பேச்சைக்கேலாமல்
உன் முகத்தைக் காண தாவிகுதித்து 
வரும் முடியை நீ 
முறைத்துப் பார்கையில் என்
இதயம் உன்னிடம் 
வரத் துடிக்குதடி... 

உன் தலைமுடி கோதிவிடும் 
பேனாவாக மாறும் பாக்கியமாவது 
எனக்கு கிடைக்குமா என
ஏங்கி தவிக்குதடி 
என் மனது... 

3 comments:

  1. Sir neengha sonna maathiriye rating koduthachu :) okay eh :)

    ReplyDelete
  2. @Shar: Money transferred to your account.. Kindly acknowledge... :)

    ReplyDelete
  3. Kaasu intha vaati kammiya iruke sir :(

    ReplyDelete