Wednesday, November 16, 2011

என்னை மனப்பாயா???


உன்னைத் தொட்டுப் பார்க்கும் ஆவலில்,
முகிலை மழைத்துளியாய்
மாற்றியது வான்...

உன்னைக் கண்ட பூரிப்பில்,
மழைத்துளியை வானவில்லாய்
மாற்றினான் ஆதவன்...

உன்னைத் தீண்டிய துளியை,
கண்டுபிடித்து முத்தாய்
மாற்றியது சிப்பி...

உன்னைக் கவரத் தான்,
பூரண அழகைக் கொண்டு
அர்ச்சிக்கிறான் சந்திரன்...

உன்னை மனக்கதான் எவ்வளவு
போட்டிகள் பார்த்தாயா???

என்னால் அவற்றிற்கு
முன்னால் நிற்கமுடியாதெனினும்,
என் வாழ்கையை உன்னோடு பகிர்ந்துகொள்ள
எண்ணி கேட்கிறேன்,
என்னை மனப்பாயா??? 


Thursday, November 10, 2011

அன்பே...



அன்பே,

உன் கோபமும் இனிது தானடி,
உனது நேசத்தைத் தெரிவிக்கும் போது...

உன் வெட்கமும் வெகுமதிதானடி,
உனது விருப்பத்தை வெளிக்கொணரும் போது...

உன் அதட்டலும் வெகுமதிதானடி,
உனது அக்கறைக்கு விளக்காகும் போது...

உன் சிணுங்கலும் செல்லமானதடி,
உனது சிறுபிள்ளைதனத்தை வெளிக்காட்டும் போது... 

உன் பிரிதலும் சுகம்தானடி,
உன்னைப் புரிதலுக்கு விதையாகும் போது...

உன் கண்ணீரும் அழகானதடி,
உனது காதலுக்குக் கண்ணாடியாகும் போது...

Tuesday, November 1, 2011

நிணைவுகள்



நண்பா,

விவரம் தெரிந்த நாள் முதல்
ஒன்றாக விளையாடி மகிழ்ந்த நிணைவுகள்,

தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்க 
ஒன்றாக தனிப்பயிற்சி வகுப்புகளுக்குச் சென்ற நிணைவுகள்,

விடுமுறை நாட்களில் 
ஒன்றாக சுற்றித் திரிந்த நிணைவுகள்,

பிறந்தநாள் கொண்டாட்டங்களை 
ஒன்றாக சேர்ந்து குதூகலித்த நிணைவுகள்,

 நண்பர்கள் எல்லோரும் 
ஒன்றாக கூடி பேசிக்களித்த நிணைவுகள்,
 
பண்டிகைகளைக் கொண்டாட 
ஒன்றாக நம்மூருக்கு பயணித்த நிணைவுகள்,
 
நீ என்னை விட்டுப் பிரிந்தாலும் 
என் நினைவுள்ளவரை நீங்காது 
நினைத்துக் கொண்டிருப்பெனடா...