ஆண் வர்க்கமே...
நான் பிறந்தது முதல்,
பெண் பிள்ளை என்றால்
செலவு என்றெண்ணி
என்னை வெறுக்கிறாய்...
மழலை என்று கூட பாராமல்
உன் அந்தரங்க இச்சைகளுக்கு
என்னை இம்சை செய்கிறாய்...
பேருந்தில் பயணம் செய்யும்போதும்
என்னை தொல்லை செய்கிறாய்...
பொது இடங்களிலும் உனது விரசப்
பார்வைகளால் என் உடலை கூசவைக்கிறாய்...
சகோதரனோடோ தோழனோடோ
செல்கையில் எவ்வளவு
ஏளனத்தோடு பார்க்கிறாய்...
பெண் பாலின் விருப்பமில்லாமல்
விலங்குகள் தொடுவதில்லை,
ஆனால் நீயோ உன் பசிக்கு
என்னை சிதைக்கிறாய்....
பணியிடத்திலும் என் திறமைக்கு
கிடைக்க வேண்டிய
பதவி உயர்வுக்கு
என் மானத்தை
விலை பேசுகிறாய்...
காதலென்னும் மாய வலையில்
என்னை சிக்கவைத்து
என்னை விலைபேசி விற்று
என் வாழ்வை சீரழிக்கிறாய்...
திருமணப் பருவத்தில்
திருமணச் சந்தையில்
என்னை விலை கொடுத்து விற்கிறாய்...
உனக்கு பணிவிடை செய்தும்
பிள்ளையை பெற்றுத்தரும்
எந்திரமாக மட்டும் நீ
என்னை பார்க்கிறாய்...
நிம்மதி தேடி கோவிலுக்கு
சென்றால் அங்கும்
உன் அட்டகாசம் தான்...
பெண்ணாகப் பிறந்தவொன்றே
நான் செய்த தவறோ???
எப்போது உன்னிடமிருந்து எனக்கு
விடுதலை கிட்டுமோ??
No comments:
Post a Comment