Friday, July 15, 2011

எது பக்தி???




வழியெங்கும் வேத வாசகங்களை 
சுவரொட்டிகளாய் ஓட்டுவதா??? 

துண்டு சீட்டுகளில் பிரசுரங்களை 
அச்சிட்டு வழங்குவதா??? 

வீதியெங்கும் தெய்வ விக்ரகங்களை 
தூக்கி செல்வதா???

அணைவரையும் இம்சைக்கும் படி 
ஒலிபெருக்கிகளில் தெய்வ 
பாடல்களை ஒலிக்கச்செய்வதா??? 

கூட்டம் கூட்டமாய் திரண்டு 
ஒன்றாக கோஷம் போடுவதா?? 

செல்வங்களை கொண்டு போய்
உண்டியலில் கொட்டுவதா?? 

புகழ் தேடி விளம்பரம் செய்யும் 
அற்ப மனிதனை வணங்குவதா?? 

தூணிலும் இருப்பேன் துரும்பிலும் இருப்பேன் 
என இறைவன் கூறியதை மறந்து 
கோவிலை தேடி செல்வதா?? 

இல்லை.. நிச்சியமாக இல்லை... 

உன் உயிரைப்போல 
மற்ற உயிரை நேசிப்பதும்,

மற்றவர்களை மனித 
நேயத்துடன் பாவிப்பதும்,

அறநெறியில் வாழ்ந்து மனதை 
தூய்மையாக வைத்திருப்பதுமே
உண்மையான பக்தி... 

2 comments: