பேருந்து பயணத்தின் போது
மண்வாசனை சுமந்து வரும்
குளிர்ந்த தென்றல்...
இரயில் பயணத்தின் போது
ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து கேட்கும்
மனதிற்கு இதமான பாடல்...
மழைச் சாரலில் வாகனம்
ஓட்டும் குதுகலம்...
மழையில் நனைந்து வீட்டுக்கு செல்கையில்
அம்மாவின் அடதத்லோடு சேர்ந்து
தலை துவட்டிவிடும் பாசம்...
அம்மாவின் மடியில் தலை சாய்க்க
உடன்பிறப்போடு போடும் சண்டை...
காலத்தால் பிரிந்த நண்பனோடு
எதிர்பாராத நேரத்தில் ஏற்படும் சந்திப்பு...
வீட்டை சுத்தப்படுத்தையில் கிடைக்கும்
ஒழித்து வைக்கப்பட்ட காதலியின்
நினைவுப் பொக்கிஷங்கள்...
பழைய புத்தகங்களின் நடுவில்
வைத்த மயிரிறகுகள்...
பழைய புகைப்படத்தைக் காணும் போது
உயிர்பெரும் புதைந்த நினைவுகள்...
இவையாவும் குட்டிக்குட்டி சந்தோஷங்களே...
ஆனால் இவையே நம் வாழ்வை
முழுமையாக்கும் சந்தோஷங்களே...

No comments:
Post a Comment