அறிவு ஜீவியே!!!
உன் படைப்புகளை எண்ணி
நான் வியப்படைந்தேன்!!!
பெருமையும் அடைந்தேன்...
ஆனால் உன் படைப்புகள்,
என் படைப்புகளுக்கு
தீங்கு விழையும் போது
நான் வருத்தப்படுகிறேன்...
உனக்காக நான் படைத்த
ஓசான் காற்று படலத்தை
ஓட்டையாக்கி தந்தாய்...
சுதமானக் காற்றை
மாசுபடுத்தி மகிழ்ந்தாய்...
மரங்களை வெட்டி
தட்பவெட்பநிலையை மாற்றினாய்...
நிலத்தடி நீரை உரிந்து
நிம்மதி அடைந்தாய்...
செழுமை நிறைந்த நிலப்பரப்பை
சதுப்பு நிலமாக மாற்றினாய்...
தெளிந்த நீரோடைகளில் கழிவுகளை
கலந்து சாக்கடையாய் மாற்றினாய்...
பொறுமைக்குப் பெயர்பெற்ற என்னை
பெருமூச்சி விடவைத்தாய்...
ஆனால் என் பெருமூச்சு உன்
இனத்தார் பலரின்
இறுதி மூச்சாகியது...
என் தவறை உணர்ந்து
நான் வெட்கமுற்றேன்
வேதனையடைந்தேன்...
ஆனால் நீ எப்போது உன்
தவறை உணரப்போகிறாயோ!!!
எப்போது திருந்தப்போகிறாயோ!!!
