Tuesday, July 26, 2011

என் பிறந்தநாள்...



துயிலெழும் போதே 
பெற்றோரின் ஆசியோடு 
இனிரோட்டியை வெட்டி, 


சகோதரியின் சேஷ்டையால்
பாலாடையை முகத்தில் தடவபெற்று 
ஆரவாரத்துடன் தொடங்கியது 
என் தாய் என்னால்
மறுபிறவி எடுத்த 
என் பிறந்தநாள்...  

நள்ளிரவு முதல் அழைப்புகளாலும்
புதிய குறுஞ்செய்தி பெறப்பட்டுள்ளது 
என அறிவித்தே சலித்துபோய் 
அணைந்துபோனது என் கைபேசி... 

நண்பர்களின் வாழ்த்துகளுக்கு 
நன்றி தெரிவித்து 
நான் அடைந்த மகிழ்ச்சியாலும்,

ஆதரவற்ற குழந்தைகளுக்கு 
இனிப்பு வழங்கையில்
அவர்களின் வாழ்த்தோடு 
சேர்ந்த புன்னகையாலும்,

மீண்டும் குழந்தையாய்
மாற்றிய பரிசுபொருட்களாலும்,

கேளிக்கை பூங்காவில் 
விளையாடிய போது 
அடைந்த குதூகலத்தாலும்,

எதிர்பார்த்த சிலரின் வாழ்த்துகளாலும்
எதிர்பாராத சிலரின் வாழ்த்துகளாலும்
நான் மகிழ்ச்சிக் கடலில் 
மூழ்கி இன்புற்றேன்... 

நாளின் முதற் நாழிகையில் 
இப்புவியில் கால் நூற்றாண்டு 
வாழ்ந்து எதை சாதித்தேன் 
என்றெண்ணிய நான், 

நாளின் கடைசி நாழிகையில் 
உணர்ந்தேன் என்னை நேசிக்கும் 
நண்பர்களையும் உறவினர்களையும் 
பெற்றதைவிட வேறேதும் 
சாதிக்க வேண்டுமோ என்று??? 

2 comments:

  1. Nanba Belated birthday wishes. ஆதரவற்ற குழந்தைகளுக்கு
    இனிப்பு வழங்கையில்
    அவர்களின் வாழ்த்தோடு
    சேர்ந்த புன்னகையாலும் intha seyalal unnudaiya nalla manathai therinthu konden BALU

    ReplyDelete
  2. @Balu Sir: Mikka nandri sir.. :)

    ReplyDelete