உன்னைத் தொட்டுப் பார்க்கும் ஆவலில்,
முகிலை மழைத்துளியாய்
மாற்றியது வான்...
உன்னைக் கண்ட பூரிப்பில்,
மழைத்துளியை வானவில்லாய்
மாற்றினான் ஆதவன்...
உன்னைத் தீண்டிய துளியை,
கண்டுபிடித்து முத்தாய்
மாற்றியது சிப்பி...
உன்னைக் கவரத் தான்,
பூரண அழகைக் கொண்டு
அர்ச்சிக்கிறான் சந்திரன்...
உன்னை மனக்கதான் எவ்வளவு
போட்டிகள் பார்த்தாயா???
என்னால் அவற்றிற்கு
முன்னால் நிற்கமுடியாதெனினும்,
என் வாழ்கையை உன்னோடு பகிர்ந்துகொள்ள
எண்ணி கேட்கிறேன்,
என்னை மனப்பாயா???

No comments:
Post a Comment