அன்பே,
உன் கோபமும் இனிது தானடி,
உனது நேசத்தைத் தெரிவிக்கும் போது...
உன் வெட்கமும் வெகுமதிதானடி,
உனது விருப்பத்தை வெளிக்கொணரும் போது...
உன் அதட்டலும் வெகுமதிதானடி,
உனது அக்கறைக்கு விளக்காகும் போது...
உன் சிணுங்கலும் செல்லமானதடி,
உனது சிறுபிள்ளைதனத்தை வெளிக்காட்டும் போது...
உன் பிரிதலும் சுகம்தானடி,
உன்னைப் புரிதலுக்கு விதையாகும் போது...
உன் கண்ணீரும் அழகானதடி,
உனது காதலுக்குக் கண்ணாடியாகும் போது...

yaradi nee mogini?
ReplyDelete