தனிமையில் நான் தவித்தபோது
துணையாய் வந்தவள் நீ...
வெறுப்பில் நான் விரக்தியடைந்தபோது
என்னை வெளி கொணர்ந்தவள் நீ...
மனப்புழக்கதில் நான் புழம்பியபோது
கைகோர்த்து ஆறுதல் சொன்னவள் நீ...
களிப்பில் என்னை மிதக்கவைக்க உன்
கொள்கையை உடைத்தவள் நீ...
நான் துயில்கொள்ளும் வரை
என்னுடன் உரையாடி உன்
தூக்கத்தை தொலைத்தவள் நீ...
எனக்கென செய்த இவற்றால் உன்னை,
தோழியாய் பார்க்கவும் முடியாமல்
காதலியாய் ஏற்கவும் முடியாமல்
குழம்பி உன்னிடமே கேட்கிறேன்,
யாரடி நீ எனக்கு...

No comments:
Post a Comment