மனிதனே!!!
வழிப்போக்கர்கள் தங்கி செல்ல
திண்ணை அமைத்த நீ
இன்று உறவினர்களை
வரவேற்க மனமில்லாமல்
இருப்பது ஏன்???
பச்சைக் கம்பளி போர்த்தி
உலகுக்கே உணவு படைத்த நீ
அவற்றை இன்று கொங்கிறீற்று
கட்டிடங்களாக மாற்றித் தவிப்பது ஏன்???
வேற்று கிரகத்தில் மனிதன்
இருக்கிறான எனத்தேடும் நீ
உன் வீட்டின் அருகில் இருக்கும்
மனிதனைக் காண மறப்பது ஏன்???
வெற்று காகிதத்தை
சேர்க்க என்னும் நீ
உன் வீட்டில் பாசத்தை ஏன்
சேர்க்க மறுக்கிறாய்???
கலாச்சாரத்திற்கும் பண்பாட்டிற்கும்
உதாரணமாய் இருந்த நீ
இன்று விலங்கை விட
கீழ்த்தரமாக நடப்பது ஏன்???
புறாவின் உயிரைக் காக்க
உன் சதையை தந்த நீ
உன் சுயநலத்திற்காக உன் இனத்தாரின்
உயிரைக் குடிப்பது ஏன்???
உன் தேவைக்கு மிகுதியை
தானமாக தந்த நீ
இன்று பத்து தலைமுறைக்கு
பொருள் சேர்ப்பது ஏன்???
அனைத்திற்கும் மேலாக
ஆலையத்தின் புனிதத்தையும்
கடவுளின் பெயரையும் நீ
கலங்கப் படுத்துவது ஏன்???
ஓர் ஆயிரம் ஆண்டிற்குள் உன்னில்
எவ்வளவு மாற்றங்கள்!!!
Good one :)
ReplyDeletegood. inum neriya eluthalam :) :) kavithai eluthurathu varverka thakka matram vivek.
ReplyDelete@Prema: Mikka nandri... Thangalin vimarsangal yennai merugetha uthavum.. :)
ReplyDelete