மானிடனே!!!
உனக்காக என் கடற்வீட்டை விட்டொழித்து
மேகமாக வடிவெடுத்து
மலைகளால் தடுக்கப்பெற்று
மழையாய் பொழிந்து
நதியாய் உருவெடுத்து
வழியெங்கும் உள்ள மூலிகைகளின்
மருத்துவத்தை பெற்றுக்கொண்டு
உன்னிடத்தில் வந்த
என் தன்மையை தகர்த்து
என் சிறப்பினை சிதைத்து
உன் கழிவுகளை கலந்து
என்னை நிர்மூலமாக்கி
திருப்பி அனுப்புவதா உன் நியாயம்???
good
ReplyDelete